Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது! 36,000 கன அடி நீர் திறப்பு!

கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது! 36,000 கன அடி நீர் திறப்பு!

Webdunia

, வெள்ளி, 20 ஜூலை 2007 (16:31 IST)
கர்நாடகத்தில் காவிரியின் மீதுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை அதன் முழு அளவிற்கு நிரம்பிவிட்டதை அடுத்து அணையில் இருந்து நொடிக்கு 36,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது!

நேற்று வரை 50,000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 40,000 கன அடியாக குறைந்தது என்றாலும், அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவான 124 அடியைத் தாண்டி தற்பொழுது 124.8 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. இன்று மாலை நிலவரப்படி 35,785 கன அடி வீதம் நீர் திறந்துவிடப்படுகிறது.

இதேபோல, கபினி அணையின் நீர் மட்டம் 2,283 அடியை (முழு நீர்மட்டம் 2,284 அடி) உயர்ந்துவிட்டதால் அணையில் இருந்து நொடிக்கு 20,775 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு மேல் உள்ள ஹாரங்கி அணையின் நீர் மட்டம் 2,858 அடியாக (முழு அளவு 2,859 அடி) உயர்ந்துள்ளது.

மற்றொரு அணையான ஹேமாவதியில் நீர் வரத்து 20,000 கன அடியாக உள்ளது.

கிருஷ்ணராஜ சாகரில் இருந்தும், கபினியில் இருந்தும் திறந்துவிடப்படும் நீரினால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நாளை இரவிற்குள் 55,000 கன அடியாக உயரும் நிலை உள்ளது. (யு.என்.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil