Publish Date: Tue, 03 Jul 2007 (11:21 IST)
Updated Date: Tue, 03 Jul 2007 (11:19 IST)
பெண் ராணுவ அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை தொடர்ந்து, தற்போது ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குஞ்வானி பகுதியில் பொறியியல் படை பிரிவின் தளபதி மேக்ஹா ராஷ்தான் என்ற பெண் ராணுவ அதிகாரி தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் இது வரை தெரியவில்லை.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராணுவ முகாமில் விஷ்னோபிரசாத் சிங் என்ற ராணுவ வீரர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பாரி பரஹமனா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கோஸ்வாமி தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Tue, 03 Jul 2007 (11:21 IST)
Updated Date: Tue, 03 Jul 2007 (11:19 IST)