Publish Date: Fri, 29 Jun 2007 (10:24 IST)
Updated Date: Fri, 29 Jun 2007 (10:24 IST)
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி நுழைந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர். அவரது பெயர் நகீர் அலிமுல்லா(22). பிமால் நஷ்கர்(40), அக்தர் அலிமுல்லா(34) என்ற இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களை கண்காணித்து வந்தனர்.
அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்தை அளித்ததால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத அந்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.
இதில் வங்காள தேசத்தை சேர்ந்த நகீர் அலிமுல்லா, கடவுச்சீட்டோ, விசாவோ எதும் இன்றி, இந்தியாவுக்குள் வந்து இருப்பதும் உறுதி பட்டது.
Webdunia
Publish Date: Fri, 29 Jun 2007 (10:24 IST)
Updated Date: Fri, 29 Jun 2007 (10:24 IST)