Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழாய் மூலம் எரிவாயுத் திட்டம்: இந்தியா ஈரான் அடுத்தமாதம் பேச்சுவார்த்தை

குழாய் மூலம் எரிவாயுத் திட்டம்: இந்தியா ஈரான் அடுத்தமாதம் பேச்சுவார்த்தை

Webdunia

, திங்கள், 18 ஜூன் 2007 (17:49 IST)
ஈரானிலிருந்து இந்தியாவிற்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை இறுதி செய்ய ஈரான் பிரதிநிதிகள் அடுத்த மாதம் இந்தியா வரவிருப்பதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிறீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானிலிருந்து குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக ஈரான் பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தர்.

இந்நிலையில் இத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக ஈரான் பிரதிநிதிகள் அடுத்த மாதம் இந்தியா வரவிருப்பதாகவும், அப்போது இத்திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்கும், முடிவு எட்டப்படாத பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றார்.

இத்திட்டம் குறித்து சமீபத்தில் இந்தியா வந்த பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அஜிஸ்வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் முரளி தியோரா தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil