Publish Date: Wed, 13 Jun 2007 (15:27 IST)
Updated Date: Wed, 13 Jun 2007 (15:26 IST)
மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவிகிருஷ்ணா குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ததை அடுத்து, கோவிலை சுத்தப்படுத்தியதற்காக கோயில் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவிகிருஷ்ணா கடந்த மே மாதம் 19 ஆம் தேதி குருவாயூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ரவிகிருஷ்ணாவின் மனைவி கிறிஸ்துவர் என்பதால், அவர் கோயிலுக்கு வந்ததை அடுத்து, கோயில் சுத்தப்படுத்தப்பட்டது.
ரவிகிருஷ்ணா குருவாயூர் கோயிலுக்கு வந்ததால், கோயிலை சுத்தப்படுத்திய கோயில் நிர்வாகத்தின் இத்தகைய செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த செயலுக்கு குருவாயூர் கோயில் நிர்வாகம் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.