Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோரக்பூரில் தொடர் குண்டு வெடிப்பு : 5 பேர் காயம்!

கோரக்பூரில் தொடர் குண்டு வெடிப்பு : 5 பேர் காயம்!

Webdunia

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் 3 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 5 பேர் காயமுற்றனர்!

கோரக்பூரின் மையப் பகுதியில் உள்ள போல்கார் என்ற இடத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்துள்ளது. சாப்பாடு எடுத்துச் செல்லும் டிஃபன் பாக்ஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உணவகத்தில் ஒரு குண்டும், அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தில் ஒரு குண்டும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தைப் பகுதியில் ஒரு குண்டும் 7 நிமிட இடைவெளிகளில் வெடித்ததாக காவல்துறை கூறியுள்ளது.

காயமுற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். (பி.டி.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil