Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு

பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு
, புதன், 19 பிப்ரவரி 2014 (11:37 IST)
விண்வெளியில் இருக்கும் ராட்ஷச விண்கற்கள் பூமியை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருப்பதாக பல செய்திகள் வெளிவரும் வேளையில், இத்தகைய ராட்ஷச விண்கற்களில் ஒன்று பூமிக்கு மிக அருகே வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
FILE

விண்வெளியில் பல்வேறு அளவுகளை கொண்ட ஏராளமான விண்கற்கள் உள்ளன. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.

இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில விண்கற்கள் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ரஷ்யாவில் விழுந்தது. 20 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த விண்கல் வெடித்து சிதறியதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.
webdunia
FILE

இச்சம்பவம் நடந்து முடிந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், பூமிக்கு மிக அருகில் ஒரு ராட்ஷச விண்கல் பாய்ந்து சென்றுள்ளது. மணிக்கு சுமார் 43,000 கிலோமீட்டர் தூர வேகத்தில் பூமியை நோக்கி வந்த இந்த விண்கல்லின் சுற்றளவு 270 மீட்டர் ஆகும்.

பூமிக்கு சுமார் 1.6 மில்லயன் மைல்கள் அருகே வந்த இந்த விண்கல், பூமி மீது மோதியிருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்குடுமென தெரிவிக்கபட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த ஆய்வாளர் ஒருவர், இத்தகைய ஆபத்து நிறைந்த விண்கற்களை நாங்கள் முன்கூட்டியே கண்டறிய முயல்கிறோம். ஆனால், சில சமயங்களில் அந்த கற்கள் பூமிக்கு மிக அருகே வந்த பிறகு தான் அதனி நாங்கள் கண்டறிய முடிகிறது என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil