Newsworld News International 0907 24 1090724130_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீரில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது ஐஎஸ்ஐ : அமெரிக்கா குற்றச்சாற்று

Advertiesment
பாகிஸ்தான்
துபாய் , வெள்ளி, 24 ஜூலை 2009 (21:03 IST)
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ காஷ்மீரிலும், ஆப்கானிஸ்தானிலும் குழப்பம் உண்டாக்கும் வேலைகளில் ஈடுபடுவதாக அமெரிக்கா ராணுவ உயரதிகாரி ஒருவர் குற்றம் சாற்றியுள்ளார்.

கத்தாரிலிருந்து ஒளிபரப்பாகும் அல் - ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த குற்றச்சாற்றைக் கூறியுள்ள அமெரிக்க படை தளபதிகளின் தலைவர் அட்மிரல் மைக் முல்லன், இந்த பிரச்னை குறித்து பாகிஸ்தான் தலைவர்களுடன் அமெரிக்கா பேசி வருவதாகவும் ஐஎஸ்ஐ, தனது இந்த அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரிலுள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து வரும் ஐஎஸ்ஐ , ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள பழங்குடியினப் பகுதிகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil