Newsworld News International 0902 09 1090209064_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விசுவமடு பகுதியில் தற்கொலைத் தாக்குதல்: 28 பேர் பலி

Advertiesment
விசுவமடு கொழும்பு முல்லைத்தீவு சிறிலங்கப் படையினர்
, திங்கள், 9 பிப்ரவரி 2009 (16:43 IST)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விசுவமடுவின் வடக்குப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.

இதில் சிறிலங்கா படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள், 18 படையினர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் மேலும் 2 அதிகாரிகளும் 48 படையினர் உட்பட 90 பேர் படுகாயமடைந்துள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளதாக புதினம் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil