Publish Date: Sat, 24 Jan 2009 (15:08 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (15:07 IST)
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில், நேட்டோ படைகளுடன் இணைந்து செயல்படத் தயார் என ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்விடேவ் தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள அதிபர் மெட்விடேவ், நேற்று அந்நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமோவை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெட்விடேவ், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் முந்தைய அரசுகளை விட தற்போதைய ஒபாமா தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும் என தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையைப் பொறுத்த வரையில் எந்த நாட்டுடனும் முழு அளவில் இணைந்து பணியாற்ற நாங்கள் (ரஷ்யா) தயாராகவே உள்ளோம். இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கு அல்ல என மெட்விடேவ் கூறியுள்ளார்.
இதேபோல் சரக்குகள், உணவுப் பொருட்களை ஆப்கானிஸ்தானுக்குள் கொண்டு செல்லும் பணியில் நேட்டோ படைகளுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளோம் என்றார்.
Webdunia
Publish Date: Sat, 24 Jan 2009 (15:08 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (15:07 IST)