Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஸாவில் ஐ.நா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி

Advertiesment
காஸாவில் ஐ.நா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி
, புதன், 7 ஜனவரி 2009 (13:44 IST)
காஸா பகுதியில் ஐ.நா நடத்தி வந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி நேற்று நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் காரணமாக வீடுகளை இழந்தவர்கள் ஜபால்யா அகதிகள் முகாமில் உள்ள அல்-ஃபகோரா பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் அங்கே தங்கியிருந்த நிலையில் பள்ளிக்கு அருகே வீசப்பட்ட 2 குண்டுகள் வெடித்ததில் பள்ளியின் உள்ளே, வெளியே இருந்த ஏராளமானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஐ.நா.வின் நிவாரணப் பணி மையம் சார்பில் நடத்தப்பட்ட மற்றொரு பள்ளியின் மீது 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நேற்று மட்டும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு 75 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 27ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம், காஸாவில் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 620 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil