Publish Date: Fri, 02 Jan 2009 (14:03 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (14:02 IST)
சிறிலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சகம் தற்போது அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களைத் தனது பொறுப்பில் வைத்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தற்போது ஊடகத்துறை அமைச்சகத்தையும் தனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சராக இருந்த அனுர பிரியதர்சன யாப்பா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த சரத் அமுனுகம, பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த கருஜெயசூரிய, அரசிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்ததையடுத்து, இந்த அமைச்சர் பதவி காலியாக இருந்தது.