உக்ரைனின் யெவ்படோரியா நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புக்குள் குண்டு வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கட்டிட இடிபாடுகளில் இருந்து 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த புதனன்று இரவு நடந்த இந்த குண்டுவெடிப்பில், கட்டிட இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.