Newsworld News International 0812 14 1081214012_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எகிப்தில் பேருந்து விபத்து: 47 பேர் பலி

Advertiesment
கெய்ரோ எகிப்து மின்யா
, ஞாயிறு, 14 டிசம்பர் 2008 (18:11 IST)
எகிப்தின் வடக்குப் பகுதியில் உள்ள மின்யா நகருக்கு அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து நீர்ப்பாசனக் கால்வாயில் விழுந்து இன்று விபத்துக்குள்ளது. இதில் 47 பேர் உயிரிழந்தனர்.

மின்யா நகர ஆளுநர் அகமது டியா கூறுகையில், எதிரே வந்த சரக்கு லாரியின் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்ற போது பேருந்து கால்வாயில் விழுந்தது என்றார்.

இவ்விபத்தில் முதற்கட்டமாக 36 பேர் மட்டுமே பலியானதாக அகமது டியா கூறினார். ஆனால் அதன் பின்னர் மேலும் 11 உடல்கள் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil