Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு உதவுவோம்: இந்தோனேஷியா

Advertiesment
இந்தியா இந்தோனேஷியா ஜகர்த்தா அதிபர் சுசிலோ பம்பாங் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்
, திங்கள், 1 டிசம்பர் 2008 (17:40 IST)
பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும், அதனைக் கட்டுப்படுத்துவதிலும் இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிப்போம் என இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பம்பாங் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசினார்.

இரு நாட்டு உயரதிகாரிகள் அளவிலான கூட்டத்திற்கு பின்னர் பிரதீபா பாட்டீல்-சுசிலோ பம்பாங் இருவரும் பேச்சு நடத்தினர்.

அப்போது 200க்கும் அதிகமானோரை பலி கொண்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சுசிலோ, அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இந்தோனோஷியா எதிரானது என்றும், அது (பயங்கரவாதம்) உலகின் அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருவதால் அதனை ஒடுக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கும் இந்தோனேஷியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் பிரதீபாவிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 24ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரதீபா பாட்டீல், வியட்நாம் நாட்டிற்கான பயணத்தை முடித்துக் கொண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு 28ஆம் தேதி சென்றார். அங்கு 2 நாட்கள் தங்கிய அவர் இன்று ஜகர்த்தாவில் அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil