Newsworld News International 0811 25 1081125016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானில் 20 தீவிரவாதிகள் பலி!

Advertiesment
பெஷாவர் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அல்கய்டா தலிபான்
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் 20 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் பதுங்கியிருந்த அல்-கய்டா, தலிபான் தீவிரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 15 தீவிரவாதிகள் பலியானதுடன், 6 தீவிரவாதிகள் காயமடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல் பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் உள்ள மொஹ்மன்ட் மாவட்டத்தின் பின்ட்யாலி கிராமத்தில் துணை ராணுவப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வடமேற்குப் பகுதியில் உள்ள பெஷாவர் நகரத்தின் சுற்றுவட்டாரத்தில் கடந்த 2 வார காலமாக நடந்த தேடுதல் வேட்டையில், 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக துணை ராணுவமும், ராணுவமும் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil