Publish Date: Fri, 21 Nov 2008 (23:25 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (23:24 IST)
இலங்கையின் வடக்குப் பகுதியான முகமாலை மற்றும் கிளாலி களமுனைகளில் விடுதலைப் புலிகளுடன் வியாழக்கிழமை நடந்த மோதல்களில் 250 சிறிலங்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்காவின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறீ ஜெயசேகர கூறியதாவது :
அநுராதபுரம்-கொழும்பு மருத்துவமனை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கு படையினர் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் மட்டும் குருநாகலுக்கு படையினரின் 48 உடலங்கள் கொண்டு வரப்பட்டன. இவை பலவற்றின் சாவு நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.