Publish Date: Mon, 17 Nov 2008 (17:16 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:00 IST)
வடபோர் முனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 25 படையினர் கொல்லப்பட்டனர், 105 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், முகமலை கண்டல் பகுதி வழியாக சிறிலங்கா படையினரின் 55வது பிரிவு படையணியினர் நேற்று அதிகாலை 5:00 மணியளவில் பாரியளவை நோக்கி முன்னேறினர்.
பின்தளங்களில் இருந்து தாக்குதல் நடத்திய சிறிலங்கா படையினர் மீது, விடுதலைப் புலிகள் சுமார் 12:30 மணி நேரம் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தியதாகவும், இதன் காரணமாக சிறிலங்கா ராணுவம் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 15 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 75க்கும் அதிகமான படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.