Publish Date: Sun, 09 Nov 2008 (10:59 IST)
Updated Date: Sun, 09 Nov 2008 (10:59 IST)
ரஷ்ய அணுசக்தி திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் அணுசக்தித் திறன் வாய்ந்த ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் பலியானார்கள். 21க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என ரஷ்ய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
தீத்தடுப்பு அமைப்பின் செயலாக்கம் தொடர்பாக கடலில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்து நடைபெற்றபோது கப்பலில் 208 பேர் இருந்தனர். எனினும் விபத்தால் நீர்மூழ்கிக் கப்பலின் அணு உலைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் கதிர்வீச்சு இயல்பான அளவில் இருப்பதாகவும் ரஷ்ய கடற்படை தெரிவித்துள்ளது.