Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தோனேஷியா: மணல் சுரங்கம் இடிந்ததில் 25 பேர் பலி!

Advertiesment
இந்தோனேஷியா: மணல் சுரங்கம் இடிந்ததில் 25 பேர் பலி!
, வெள்ளி, 31 அக்டோபர் 2008 (10:46 IST)
இந்தோனேஷியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மணல் அள்ளும் சுரங்கம் இடிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் சுலவேஷி மாகாணத்தில் உள்ள இந்த மணல் சுரங்கம் நேற்று மதியம் இடிந்து விழுந்ததாகவும், அப்போது பணியில் இருந்த 25 தொழிலாளர்கள் சுரங்கத்திலேயே சிக்கிக் கொண்டதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 5 உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டதாகவும், சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil