Newsworld News International 0810 30 1081030026_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐ.நா. தலைமைச் செயலர் இந்தியா வருகை!

Advertiesment
பான் கி மூன் இந்தியா வருகை ஐநா தலைமைச் செயலர் பிரதமர் மன்மோகன் சிங்
, வியாழன், 30 அக்டோபர் 2008 (12:25 IST)
ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கி மூன் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட தலைவர்களை பான் கி மூன் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பின் போது, சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சிக்கல், தட்பவெப்ப நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

இந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சர்வதேச தலைவர்களின் கூட்டத்தை அமெரிக்கா கூட்டியுள்ள நிலையில், பான் கி மூன் புதுடெல்லி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil