Newsworld News International 0810 22 1081022033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌ங்கா கட‌‌ற்படை க‌‌ப்ப‌ல்க‌ள் ‌மீது ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் த‌ற்கொலை தா‌க்குத‌ல்!

Advertiesment
சிறிலங்கா கடற்படை கப்பல்கள் விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல் கொழும்பு
, புதன், 22 அக்டோபர் 2008 (12:59 IST)
கொழு‌ம்பு: யாழ்‌ப்பாண‌மகாங்கேசன்துறை கடற்பரப்பில் சிறிலங்காவின் 2 சர‌க்குக் கப்பல்களை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் இ‌ன்றஅ‌திகாலை‌ த‌ற்கொலை‌ததாக்குதல் நடத்தினர்.

காங்கேசன்துறை மயிலிட்டி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த சரக‌்குக் கப்பல்களான 'ருகுண', 'நிமலவ' ஆகியவற்றினை இலக்கு வைத்து இன்று அதிகாலை 5.10 ம‌ணியள‌வி‌லவிடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் தாக்குதல் நடத்தின‌.

இதில் ஒரு கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. மற்ற கப்பலுக்கு எ‌ந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எ‌ன்று‌மவிடுதலைப் புலிகளின் தாக்குதல் முயற்சியினை முடியடித்துள்ளோம் எ‌ன்று‌மசிறிலங்கா கடற்படை செ‌ய்‌தி‌த்தொட‌ர்பாள‌ரி.ே.பி.தசநாயக்க தெரிவித்து‌ள்ளா‌ர்.

எ‌னினு‌ம், இ‌ந்த தாக்குதல் கு‌றி‌த்து விடுதலைப் புலிகள் தர‌ப்‌பி‌ல் அதிகாரபூர்வமாக எ‌ந்த அ‌றி‌வி‌ப்பு‌ம் வெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்லை.

Share this Story:

Follow Webdunia tamil