Publish Date: Sun, 19 Oct 2008 (16:11 IST)
Updated Date: Sun, 19 Oct 2008 (16:10 IST)
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலோசிஸ்தானில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
டேரா பக்டி நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் அகமதன் பக்டி மகன் யூசுப் பக்டியை இலக்காக கொண்டு சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்ததாகவும், இதில் அவர் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த 5 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.