Newsworld News International 0810 14 1081014030_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரீஸ் நாட்டில் கடும் நிலநடுக்கம்!

Advertiesment
ஏதென்ஸ் கிரீஸ் ரிக்டர் நிலநடுக்கம்
கிரீஸ் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிர்‌‌ச்சேதமோ, பொருட் சேதமோ எதுவு‌ம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 7.47) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இவியா தீவுக்கும், ஹல்கிடா பகுதிக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் மையம் கொண்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில், 2 மிதமான நிலநடுக்கங்களும் அப்பகுதியில் பதிவானதாகவும், இதன் தாக்க‌ம் அந்நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் வரை உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil