Publish Date: Tue, 07 Oct 2008 (11:49 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (11:48 IST)
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்-கி-மூன் இம்மாத இறுதி அல்லது நவம்பர் மாததுவக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. தலைமை செய்தி தொடர்பாளர் மிச்சிலி மோன்டாஸ், இந்திய பயணத்திற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
அக்டோபர் 27 முதல் 30ஆம் தேதி வரை மணிலாவில் நடக்கும் மாநாட்டில் பான்-கி-மூன் பங்கேற்பார் என்றும் அந்தப் பயணத்தின் போதே இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது மிச்சிலி கூறினார்.
Webdunia
Publish Date: Tue, 07 Oct 2008 (11:49 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (11:48 IST)