Publish Date: Sat, 04 Oct 2008 (18:17 IST)
Updated Date: Sat, 04 Oct 2008 (18:04 IST)
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் 41 வயது மதிக்கத்தக்க இந்தியரின் உடல் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்நாட்டு காவல்துறையினர் நேற்று சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தியதில் பலியானவர் பெயர் ஹிர்மீஷ் லால் என்பது தெரியவந்ததாக, பஹ்ரைன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள கோவஹார் பகுதியைச் சேர்ந்த ஹிர்மீஷ் வயிறு மற்றும் மூக்கில் காயங்கள் இருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.