Publish Date: Sat, 13 Sep 2008 (13:35 IST)
Updated Date: Sat, 13 Sep 2008 (13:34 IST)
ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அந்நாட்டின் லோகர் மாகணத்தைச் சேர்ந்த ஆளுநர் பலியானார்.
லோகர் மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் அப்துல்லா வார்டக். இவர் இன்று காலை பாக்மன் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது தீவிரவாதிகள் அவரது வாகனத்தைக் குறிவைத்து ரிமோட் கட்டுப்பாட்டு கருவி மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில் ஆளுநர் அப்துல்லா வார்டக் மற்றும் அவரது பாதுகாவலர் ஒருவரும் உடல் சிதறி பலியானார்கள். அப்துல்லா வார்டக் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Sat, 13 Sep 2008 (13:35 IST)
Updated Date: Sat, 13 Sep 2008 (13:34 IST)