Publish Date: Mon, 28 Jul 2008 (22:00 IST)
Updated Date: Mon, 28 Jul 2008 (22:00 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை வழியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
படையினரின் இந்த முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறிடிப்புத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரண்டு தரப்பிற்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 படையினர் காயமடைந்துள்ளனர் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.