Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முஷாரஃப், கிலானியை இன்று சந்திக்கிறார் பிரணாப்!

Advertiesment
முஷாரஃப், கிலானியை இன்று சந்திக்கிறார் பிரணாப்!
, புதன், 21 மே 2008 (11:07 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையே 5ம் கட்ட முக்கிய பேச்சு வார்த்தைகள் தொடர்பாக இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜீ பாகிஸ்தான் சென்றுள்ளார். இன்று அவர் அதிபர் முஷாரஃப் ம‌ற்று‌ம் பிரதமர் கிலானி ஆகியோரை சந்திக்கிறார்.

இந்திய - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் மட்ட பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. அப்போது எல்லை தாண்டிய தீவிரவாதம், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு ஆகியவை விவாதிக்கப்பட்டன.

இன்று பிரணாப் முகர்ஜீ, பாகிஸ்தான் அதிபர் முஷாரப், பிரதமர் யூசுஃப் ரசா கிலானி ஆகியோரை சந்தித்து மேலும் பல முக்கிய விவாதங்களை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேச்சு வார்த்தைகள் மூலம் இந்திய - பாகிஸ்தான் உறவுகள் வலுப்பெறும் என்று பிரணாப் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil