Publish Date: Thu, 01 May 2008 (13:47 IST)
Updated Date: Thu, 01 May 2008 (13:46 IST)
மேற்கு ஈரானில் இன்று மிதமான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
லாரெஸ்டன் மாகாணத்தில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மூன்று நகரங்களில் உள்ள நூற்றுக்கணக்கான மண் கட்டடங்கள் சேதமடைந்தன என்று உள்ளூர்த் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
இடிபாடுகளில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்று லாரெஸ்டன் மாகாண பேரிடர் மேலாண்மை அலுவலர் ரேசா அரியாய் தெரிவித்தார்.