Publish Date: Wed, 19 Mar 2008 (20:55 IST)
Updated Date: Wed, 19 Mar 2008 (20:54 IST)
இலங்கை வன்னியில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன், 16 படையினர் படுகாயமடைந்தனர்.
வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை)பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த மோதலிலும், கரம்பைக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலிலும் 4 படையினர் படுகாயமடைந்தனர்.
மன்னார் பறையனாலங்குளத்தில் நடந்த மோதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 11 பேர் படுகாயமடைந்தனர்.
மூங்கில்முறிச்சியில் நேற்று காலை 8:25 மணியளவில் நடந்த மோதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அதேபகுதியில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி படையினர் ஒருவர் கொல்லப்பட்டார்.
மணலாறில் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் நேற்று காலை நடந்த மோதலில் படையினர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இத்தகவல்களை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Webdunia
Publish Date: Wed, 19 Mar 2008 (20:55 IST)
Updated Date: Wed, 19 Mar 2008 (20:54 IST)