Publish Date: Fri, 04 Jan 2008 (13:43 IST)
Updated Date: Fri, 04 Jan 2008 (13:43 IST)
இலங்கையில் இருந்து ஜனவரி 16 ஆம் தேதி வெளியேற உள்ளதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "கடந்த 2002 அம் ஆண்டு சிறிலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைபட்சமாக வெளியேறுவதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.
அரசின் இந்த முடிவு வருகிற 16 ஆம் தேதி மாலை 7.00 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. எனவே அன்று எங்களின் பணிகளை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.