Publish Date: Fri, 28 Dec 2007 (11:44 IST)
Updated Date: Fri, 28 Dec 2007 (11:44 IST)
'எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முஷாரஃப்தான் பொறுப்பு' என்று பெனாசிர் புட்டோ மின்னஞ்சல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
பெனாசிர் தனது நண்பரும் அமெரிக்க சி.என்.என். தொலைக்காட்சி செய்தியாளருமான ஒல்ப் பினிட்சருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்.
அதில், "நான் பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறேன். முஷாரஃப் எனக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை. எனக்கு வழங்கப்பட்டுள்ள கார் பாதுகாப்பானதாக இல்லை. எனது காரை சுற்றி 4 பக்கத்திலும் பாதுகாப்பு வாகனங்கள் வரவேண்டும். ஆனால் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. வெடிகுண்டை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவி பொருத்தவில்லை.
எனக்கு வேறு வழி தெரியவில்லை. பாதுகாப்பற்ற நிலையில்தான் பயணம் செய்கிறேன். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு முஷாரஃப்தான் பொறுப்பு" என்று கூறியுள்ளார். இந்த மின்னஞ்சலை பாகிஸ்தான் மக்கள் கட்சி நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.