Publish Date: Fri, 28 Dec 2007 (09:48 IST)
Updated Date: Fri, 28 Dec 2007 (09:48 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை சுட்டுக் கொன்றது அல் கய்டாவாக இருக்காலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது!
பெனாசிர் படுகொலைக்கு அல் கய்டா பொறுப்பேற்றுள்ளதாக இஸ்லாமிய இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. கூறியுள்ளது.
தனது பாகிஸ்தான் கொள்கைக்கான கருவியாக பெனாசிர் புட்டோவை அமெரிக்கா அனுப்பியுள்ளது என்று அவரது பாகிஸ்தான் வருகையை வர்ணித்த அல் கய்டா, பெனாசிரைத் தீர்த்துக்கட்ட இஸ்லாமாபாத்தில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
சந்தேகத்தின் கோடுகள் அல் கய்டாவே நோக்கி நீண்டாலும், பெனாசிர் படுகொலையில் பாகிஸ்தான் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களின் சதி வேலையாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளதென்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.