Publish Date: Mon, 10 Dec 2007 (19:59 IST)
Updated Date: Mon, 10 Dec 2007 (19:58 IST)
உலகில் பசியால் வாடும் குழந்தைகளில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தெற்காசியாவில் உள்ளனர் என்று யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆஃப்ரிக்கா, தெற்காசிய பகுதிகளில் உள்ள வளர்ந்துவரும் நாடுகளில் வசிக்கும் குழந்தைகளின் வறுமை நிலை தொடர்பாக 'குழந்தைகளுக்கான முன்னெற்றம்' என்ற தலைப்பில் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ''உலகில் 5 வயதிற்கு உட்பட்ட 130 மில்லியன் குழந்தைகள் பசியாலும், சத்துக்குறைவாலும் பாதிக்கப்படுகின்றனர். இதில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான குழந்தைகள் தெற்காசியாவில் வசிக்கின்றன.
ஏழை நாடுகள் பலவற்றில் குழந்தை மரண விகிதம் குறைந்துள்ளது. ஆனால் தெற்காசியா, துணை சஹாரா, ஆஃப்ரிக்க நாடுகள் ஆகியவற்றில் குழந்தை மரண விகிதம் அதிகரித்து வருகிறது.
அதேபோல, வளர்ந்துவரும் நாடுகளில் 19 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் போது எடை குறைவாகப் பிறக்கின்றன. அதில் 8.3 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் பிறக்கின்றன'' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் மேம்பாடு குறித்து யுனிசெஃப் அமைப்பு கடந்த 3 ஆண்டுகளில் வெளியிட்டுள்ள 6 ஆவது அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Mon, 10 Dec 2007 (19:59 IST)
Updated Date: Mon, 10 Dec 2007 (19:58 IST)