Publish Date: Tue, 21 Aug 2007 (12:35 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:10 IST)
யாழ்பாணத்தில் சிறிலங்க ராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலாலி முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று காலை 8.45 மணியளவில் நீண்ட தூர பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர் என்றும், பீரங்கி குண்டுகள் பலாலி முகாமிற்குள் வந்து விழுந்ததாகவும் கூறியுள்ள சிறிலங்க பாதுகாப்பு அதிகாரி, அதற்கு பதலடி கொடுத்து சிறிலங்க ராணுவத்தினரும் பீரங்கிகளை கொண்டும், பல்குழல் ராக்கெட்டுகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது சண்டை நின்று அமைதி நிலவுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.
பலாலி மட்டுமின்றி, யாழ்குடா நாட்டில் உள்ள காங்கேசன் துறைமுகத்தின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக புதினம்.காம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகாலை 2 மணி முதல் நடந்த இத்தாக்குதலில் 130 மி.மீ. பீரங்கிகளைக் கைப்பற்றி எரிகணை தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியதாக புதினம் செய்தி கூறுகிறது.
Webdunia
Publish Date: Tue, 21 Aug 2007 (12:35 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:10 IST)