Publish Date: Sat, 18 Aug 2007 (12:51 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:05 IST)
சைப்ரஸ் நாட்டில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு 136 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது.
அட்லாஸ் ஜெட் என்ற இந்த விமானத்தில் 136 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனர். சைப்ரஸில் உள்ள ஏர்கான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி அந்த விமானம் துருக்கி நாட்டில் அண்டாலியா விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இறக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை கடத்தியவர்கள் அதனை ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு பறக்குமாறு கூறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.