Newsworld News International 0708 04 1070804009_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாலிபான் தாக்குதல்: 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி

Advertiesment
4 பாகிஸ்தான் வீரர்கள் பலி

Webdunia

, சனி, 4 ஆகஸ்ட் 2007 (13:40 IST)
பாகிஸ்தானில் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவ சோதனை சாவடி மீது தாலிபான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 தீவிரவாதிகளும், 4 பாகிஸ்தான் வீரர்களும், கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள வாஷிரிஸ்தான் பகுதி அருகே இராணுவ சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி மீது இன்று தாலிபான் ஆதரவு தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகள் 50 ராக்கெட்டுகளை வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே நடந்த பயங்கர சண்டையில் 10 தாலிபான் தீவிரவாதிகளும், 4 பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் வாஹீத் அர்சாத் தெரிவித்தார். மேலும, இதில் 4 பாதுகாப்பு வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதிக்குள் நுழைந்து இராணுவம் தாக்குதல் நடத்திய தொடர்ந்து அங்கு தற்கொலைப் படை தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 200 பேர் பலியாகினர். பலியானவர்களில் பொரும்பாலோனர் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர்.

Share this Story:

Follow Webdunia tamil