Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்து 6 பேர் பலி

Advertiesment
அமெரிக்காவில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்து 6 பேர் பலி

Webdunia

, வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (12:56 IST)
அமெரிக்காவில் பெரிய பாலம் ஒன்று திடீரென இடிந்து ஆற்றிற்குள் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் மிசிசிபி ஆற்றுக்கு இடையேயும், செயிண்ட் மற்றும் மின்னேசோதா பகுதிக்கும் இடையே கட்டப்பட்டுள்ளது.

தற்போது பாலத்தில் வேலை நடைபெற்று வரும் நிலையில், நேற்றிரவு திடீரென பாலம் இடிந்து ஆற்றிக்குள் விழுந்தது. இதில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்துகளும் ஆற்றில் விழுந்து மூழ்கின.

இதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 58 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற வாகனம் பாலத்தை கடந்து சென்ற பின்னர் இந்த சம்பவம் நடந்திருப்பதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil