Publish Date: Mon, 30 Jul 2007 (20:30 IST)
Updated Date: Mon, 30 Jul 2007 (20:30 IST)
இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃப் மீது குற்றம் சாற்றி வழக்கு தொடர்ந்ததில் தவறு நேர்ந்துவிட்டது, என்றாலும் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று ஆஸ்ட்ரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறியுள்ளார்!
மெல்போர்னில் செய்தியாளர்களிடம் பேசிய ஹோவர்ட், பயங்கரவாதத்திற்கு எதிரான ஆஸ்ட்ரேலியாவின் புதிய சட்டம் துவக்கத்திலேயே இடறிவிட்டதன் காரணமாக இத்தவறு நேர்ந்துவிட்டது என்று கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அவ்வப்போது தவறுகள் ஏற்படத்தான் செய்யும். எனவே, வருத்தம் தெரிவிப்பதைவிட, பாதுகாப்பாக கையாள்வதே சிறந்தது. ஆயினும், இதற்காக மருத்துவர் ஹனீஃபிடம் ஆஸ்ட்ரேலியா மன்னிப்பு கோராது என்று கூறிய பிரதமர், ஜான் ஹோவர்ட், தான் வஞ்சிக்கப்பட்டதாக ஹனீஃப் கூறியிருப்பதையும் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். (பி.டி.ஐ.)