Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன்னாரில் கடும் மோதல் : ராணுவம் 1 பலி, 11 பேர் காயம்!

Advertiesment
மன்னாரில் கடும் மோதல் : ராணுவம் 1 பலி, 11 பேர் காயம்!

Webdunia

, சனி, 14 ஜூலை 2007 (16:27 IST)
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் மன்னாரில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை கைப்பற்ற சிறிலங்க ராணுவம் முன்னேறியதை அடுத்து ஏற்பட்ட கடும் சண்டையில் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 11 பேர் காயமடைந்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் தம்பனை எனும் பகுதியை நோக்கி இன்று காலை 6 மணிக்கு ஆர்டிலரி குண்டுகளை சுட்டுக் கொண்டு சிறிலங்க ராணுவம் முன்னேறியதாகவும், அதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், கடுமையாக நடந்த சண்டையில் ராணுவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 11 ராணுவத்தினர் படுகாயமடைந்ததாகவும் சிறிலங்க ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சமரசிங்கே கூறியதாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil