Newsworld News Business 0803 18 1080318019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோயா புண்ணாக்கு ஏற்றுமதி பாதிப்பு!

Advertiesment
இந்தியா ஏற்றுமதி சோயா புண்ணாக்கு சோயா எண்ணெய் ஆலைகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அகர்வால்
, செவ்வாய், 18 மார்ச் 2008 (12:15 IST)
இந்தியாவில் இருந்து அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சோயா புண்ணாக்கு குறைந்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் பிப்ரவரி மாத இறுதிவரை 33.8 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் 11 மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.85 விழுக்காடு குறைவு.

சோயா புண்ணாக்கு ஏற்றுமதி நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்திருந்தாலும், இந்த எண்ணெய் வருடத்துடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து சோயா எண்ணெய் ஆலைகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அகர்வால் கூறும் போது,
இந்த எண்ணெய் ஆண்டில் சோயா எண்ணெய் ஆலைகளின் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது.
2007 அக்டோபர் முதல் 2008 பிப்ரவரி வரை சோயா புண்ணாக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இந்த ஐந்து மாதங்களில் 26.18 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற எண்ணெய் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ( ஐந்து மாதம்) 19.20 விழுக்காடு அதிகம். சென்ற வருடம் 21.96 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று கூறினார்.

சோயா புண்ணாக்கு மாட்டு தீவனம், கோழி தீவனம் போன்றவைகள் தயாரிக்க பயன்படுகிறது. இந்தியாவில் இருந்து அதிக அளவு சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், இதன் விலை உள்நாட்டில் அதிகரிக்கிறது. இந்த ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்று கால்நடை, கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil