Publish Date: Thu, 24 Jan 2008 (17:32 IST)
Updated Date: Thu, 24 Jan 2008 (17:24 IST)
ஸ்ரீராம் இ.பி.சி நிறுவனம் பங்கு சந்தையில் ரூ.165 கோடி முதலீடு திரட்ட உள்ளது. இதற்காக இந்நிறுவனம் 50 லட்சம் பங்குகளை வெளியிடுகிறது.
இந்நிறுவனம் கட்டுமான துறைக்கு வேண்டிய இயந்திரங்கள் மற்றும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இது ஒரு பங்கின் விலை ரூ.290 முதல் ரூ.330 வரை என நிர்ணயித்துள்ளது. இந்த பங்குகளுக்கு ஜனவரி 29 ந் தேதி முதல் பிப்ரவரி 1 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த பங்கு வெளியீடு மூலம் திரட்டப்படும் முதலீடு, இதன் துணை நிறுவனங்களின் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.