Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாடா ஸ்டீல் முன்னுரிமை பங்கு வெளியிடுகிறது

டாடா ஸ்டீல் முன்னுரிமை பங்கு வெளியிடுகிறது

Webdunia

, திங்கள், 8 அக்டோபர் 2007 (19:02 IST)
டாடா ஸ்டீல் நிறுவனம் ஆங்கிலோ - டச்சு உருக்காலை வாங்குவதற்கு முதலீடு திரட்ட முன்னுரிமை பங்குகளை வெளியிடுகிறது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகளை ஏற்கனவே வைத்திருப்பவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் பங்குகள் வழங்குவதன் மூலம் ரூ.5,481 கோடி திரட்டப்படும். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகளை ஏற்கனவே வைத்திருப்பவர்களுக்கு, பத்து பங்குகளுக்கு ஒன்பது பங்குகள் என்ற அடிப்படையில் முன்னுரிமை பங்குகள் ஒதுக்கப்படும்.

ரூ.100 முகமதிப்புள்ள ஆறு முன்னுரிமை பங்குகள், ரூ.600 முகமதிப்புள்ள பங்காக மாற்றப்படு்ம். இந்த பங்கு 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முழு பங்காக மாற்றப்படும் என்று டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil