Publish Date: Thu, 19 Jul 2007 (14:14 IST)
Updated Date: Thu, 19 Jul 2007 (14:13 IST)
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட விலை மதிப்புள்ள பங்குகளில் முதலீடு அதிகரித்ததன் காரணமாக பங்குச் சந்தைகளில் இன்று பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது!
இன்று காலை 1 மணி நேர வர்த்தகத்திலேயே மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 1.1 விழுக்காடு அதாவது, 162 புள்ளிகள் உயர்ந்து இதுவரை எட்டாத அளவான 15,463 புள்ளிகளைத் தொட்டது.
தேச பங்குச் சந்தைக் குறியீடு 42 புள்ளிகள் உயர்ந்து 4,541.50 புள்ளிகளைத் தொட்டது.
ரிலையன்ஸ், ஏ.சி.சி., எல் அண்ட் டி, பஜாஜ் ஆட்டோ, டாட்டா மோட்டார்ஸ், பெல், கிராசிம், இன்ஃபோசிஸ், ஸ்டேட் பேங்க், டி.சி.எஸ். ஆகியவற்றின் பங்குகள் ஏறுமுகத்தில் உள்ளன. (பி.டி.ஐ.)