Publish Date: Mon, 17 Sep 2007 (19:27 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:12 IST)
குறுந்தகடு மற்றும் டி.வி.டி பிளேயர்களை உற்பத்தி செய்யும் மோசர் பியர், தனது உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவ உள்ளது. இதற்காக ரூ.2,000 கோடி முதலீடு செய்யப் போவதாக அதன் நிர்வாக இயக்குநர் தீபக் பூரி கனெக்ட் 2007 கருத்தரங்கில் பேசும் போது தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலை நவீன தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும். இதன் மூலம் நேரடியாக 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், இது ஆரம்ப கட்ட முதலீடே என்றும், மேலும் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.