Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு 5 பைசா உயர்வு

Advertiesment
ரூபாய் மதிப்பு 5 பைசா உயர்வு
மும்பை , வியாழன், 29 ஜனவரி 2009 (14:04 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் தொடர்ந்து மூன்று நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அத்துடன் ஏற்றுமதியாளர்களும், வங்கிகளும் டாலரை விற்பனை செய்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.86 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.91-49.93.

இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.87 முதல் ரூ.48.93 என்ற அளவில் இருந்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.90 பைசா
1 யூரோ மதிப்ப ரூ.64.10
100 யென் மதிப்பு ரூ.54.37
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.69.10.

Share this Story:

Follow Webdunia tamil