Newsworld Finance News 0901 22 1090122048_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு 21 பைசா உயர்வு

Advertiesment
ரிசர்வ் வங்கி டாலர் யூரோ யென் பவுன்ட் ஸ்டெர்லிங்
மும்பை: , வியாழன், 22 ஜனவரி 2009 (13:42 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் சாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையில் இன்றும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இதனால் அந்நிய முதலீடு வரும் என்பதால் ஏற்றுமதியாளர்கள், வங்கிகள் டாலரை விற்பனை செய்தனன. இத்துடன் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய டாலரின் மதிப்பும் குறைந்தது. இதுவும் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து, டாலரின் மதிப்பு குறைவதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.90 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 21 பைசா அதிகம்.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.11-49.12.

நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா அதிகரித்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.93 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.63.70
100 யென் மதிப்பு ரூ.54.76
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.68.06.

Share this Story:

Follow Webdunia tamil