Newsworld Finance News 0812 23 1081223035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைத்தறிக்கு ரூ.2600 கோடி உதவி

Advertiesment
ஜவுளி மக்களவை கைத்தறி அஸ்ஸாம் உத்தரபிரதேசம் ராஜஸ்தான் மகாராஷ்டிரா ஒரிசா அமெரிக்கா ஐரோப்பா
, புதன், 24 டிசம்பர் 2008 (13:19 IST)
புது டெல்லி: தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில். மத்திய ஜவுளி அமைச்சகம், கைத்தறி துறைக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடியிலான உதவி திட்டத்தை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி இருப்பதாக மக்களவையில் ஜவுளி துறை அமைச்சர் சங்கராசிங் வகேலா தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று கேள்விக்கு எழுத்து பூர்வமான பதிலளிக்கையில், இந்த திட்டத்தின் படி கூட்டுறவு கைத்தறி சங்கங்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். இவைகளுக்கு சலுகை வட்டியாக 7 விழுக்காடு வட்டிக்கு கடன் கொடுக்கப்படும்.

அஸ்ஸாம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள கைத்தறி கூடங்களை மூடும் நிலை உருவாக்கி இருப்பதாக, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன. இவை விசைத்தறியின் போட்டியை சமாளிக்க இயலாமை, கடன் கிடைக்காமல் இருப்பது, தற்போதைய சந்தை நிலவரத்திறக்கு ஏற்ப மாற முடியாமல் இருப்பது போன்ற காரணங்களினால் கைத்தறி கூடங்களை மூடும் நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இந்தியாவில் உள்ள கைத்தறி கூடங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன. இதனால் நெசவாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வகேலா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil