Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெட்ரோல் ‌நிலைய‌ங்க‌ள் 24 ம‌ணி நேரமு‌ம் திறந்திருக்கும்: த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

Advertiesment
பெட்ரோல் ‌நிலைய‌ங்க‌ள் 24 ம‌ணி நேரமு‌ம் திறந்திருக்கும்: த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!
, புதன், 27 ஆகஸ்ட் 2008 (10:02 IST)
பெட்ரோல் ‌வி‌ற்பனை ‌நிலைய‌ங்க‌ளஞாயிற்றுக் கிழமைகளிலும் செயல்படும் என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இததொட‌ர்பாத‌மிழஅரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்செய்திக் குறிப்பில், தமிழகத்தில் பெட்ரோல் ‌வி‌ற்பனை ‌நிலை‌ய‌ங்க‌ளை இரவு 10 முதல் காலை 6 மணிவரை மூடவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடவும் பெட்ரோல் ‌‌நிலைஉரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதையடுத்து, தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பெட்ரோல், டீசல் அத்தியாவசியப் பொருள்கள் என்பதாலும், பெட்ரோல் ‌வி‌ற்பனை ‌நிலைய‌ங்க‌ளஇன்றியமையா சேவைப் பணி என்பதாலும், இத்தகைய கட்டுப்பாடுகள் சட்ட விரோதமானது என தெரிவிக்கப்பட்டது.

பெட்ரோல் ‌வி‌ற்பனை ‌நிலைய‌ங்க‌ளவெளியிட்டுள்ள அறிவிப்பை உடனே விலக்கிக் கொள்ளவும் வழக்கம் போல் பெட்ரோல் ‌நிலைய‌ங்க‌ளசெயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களும், போதிய அளவு டீசல் விநியோகிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்'' எ‌ன்றஅரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil